சென்னையில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்.. பேக்கேஜ் முறையில் அழகிகளிடம் உல்லாசம் 

சென்னையில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்.. பேக்கேஜ் முறையில் அழகிகளிடம் உல்லாசம் 

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் செயல்பட்டு வந்த  மசாஜ் நிறுவனத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரகசிய விசாரணையில் போலீசார் இறங்கினார். வாடிக்கையாளர் போல காவலர் ஒருவரை மசாஜ் சென்டருக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது உறுதியானது. இதையடுத்து  மசாஜ் சென்டருக்கு சென்று அதிரடி சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது மசாஜ் சென்டரில் 10 அழகிகள் இருந்தனர். இவர்களில் 8 பேர் தமிழ் பெண்கள் ஆவர். மற்ற இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள்.

இந்த 10 பேரும் மசாஜ் சென்டரில் மசாஜ் அழகிகளாக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த அழகிகளில் வாடிக்கையாளர்கள் ஒருவரை தேர்வு செய்து மசாஜுக்கு அழைத்து சென்றதும் அதன் பிறகு அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் மசாஜ் சென்டர்களில் ரூ.1,500 முதல் ரூ.5 ஆயிரம் வரையில் பேக்கேஜ் முறையில் அழகிகளிடம் உல்லாசமாக இருக்க பண வசூல் நடைபெற்று வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மசாஜ் சென்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். சம்மந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

பிடிபட்ட 10 அழகிகளும் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். சென்னையில் இதுபோன்று பல்வேறு மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற மசாஜ் சென்டர்கள் அனைத்தையும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.