சாலையோர வியாபாரிகளுக்கு தனி நலவாரியம்...அரசு அறிவிப்பு!!

சாலையோர வியாபாரிகள் நலவாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சாலையோர கடைகள் மற்றும் வணிக நிறுவன வியாபாரிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், தனி நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சாலையோரக் கடைகள் மற்றும் வணிக நிறுவன வியாபாரிகள் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தின் தலைவராக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் இருப்பார். உறுப்பினர்களாக, தொழிலாளர் நலன், நிதித்துறைச் செயலர்கள், தொழிலாளர் நலத்துறை ஆணையர், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர்.  

பணியாளர் தரப்பின் பிரதிநிதிகளாக 5 பேரும், தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த 5 பேரும் என மொத்தம் 10 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க || "பிரதமர் மோடி ஊழலற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்" அண்ணாமலை பேச்சு!!