சரக்கு விமானத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சிலந்திகள், போதை மாத்திரைகள் பறிமுதல்…  

போலந்து, அமெரிக்கா, நெதா்லாந்து நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த  சரக்கு விமானத்தில் பரிசு பொருட்கள்,மருத்துவ பொருட்கள் என்ற பெயரில் கொடிய விஷமுடைய 10  சிலந்தி பூச்சிகள், ரூ.10 லட்சம் மதிப்புடைய உயா்ரக போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சரக்கு விமானத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சிலந்திகள், போதை மாத்திரைகள் பறிமுதல்…   

சென்னை பழைய விமானநிலையத்திற்கு அமெரிக்காவிலிருந்து சரக்கு விமானம் வந்த பாா்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைய செய்தனர். அதில் ஒரு பாா்சல் போலந்து நாட்டிலிருந்து சென்னை வழியாக ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் முகவரிக்கு வந்திருந்தது.அந்த பாா்சலில் பரிசு பொருள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகம் ஏற்பட்டு  பாா்சலை பிரித்து பாா்த்த அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.அதனுள் உயிருடன் கூடிய 10 சிலந்தி பூச்சிகள் தனித்தனி கூம்பு வடிவ பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து சுங்கத்துறையினா் உடனடியாக சென்னையில் உள்ள மத்திய வன குற்றப்புலனாய்வு துறைக்கு தகவல் கொடுத்துதனா்.அவா்கள் விரைந்து வந்து பாா்த்துவிட்டு,இவைகள் மிகக்கொடிய விஷமுடைய ஆப்ரிக்கா நாடுகளில் உள்ள சிலந்தி பூச்சிகள் எனவே இவைகளை வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கூறினா்.இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள்  கொடிய விஷமுடைய 10 வெளிநாட்டு சிலந்தி பூச்சிகளையும்,சரக்கு விமானம் மூலம் போலந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தனா்.அதோடு இந்த சிலந்தி பூச்சிகளை பரிசு பொருள் என்ற பெயரில் இறக்குமதி செய்தவா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

இதற்கிடையே அதே சரக்கு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து சென்னை முகவரிக்கு மருத்துவ பொருட்கள் என்ற பெயரில் ஒரு பாா்சல் வந்திருந்தது.அதை திறந்து பாா்த்தனா்.அதனுள் 274 கிராம் பதப்படுத்தப்பட்ட உயா் ரக கஞ்சா இருந்ததை கண்டுப்பிடித்தனா். அதோடு நெதா்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த மேலும் 2 பாா்சல்களையும் சந்தேகத்தில் பிரித்து பாா்த்தனா்.அதனுள் உயா் ரக போதை மாத்திரைகள் 92 கிராம் எடையில் இருந்தன. இதைப்போல் மொத்தம் 9 பாா்சல்களில் போதை மாத்திரைகள், உயா் ரக கஞ்சா இருந்தன. இவைகளின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம். இந்த பாா்சல்கள் அனைத்துமே போலி முகவரிகளில் சென்னைக்கு வந்துள்ளன.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் போதை மாத்திரைகள், உயா் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.அதோடு போதை கடத்தல் சட்டப்படி சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் வெளி நாடுகளிலிருந்து வந்த பாா்சல்களில் கொடிய விஷமுடைய 10 சிலந்தி பூச்சிகள், ரூ.10 லட்சம் மதிப்புடைய உயா்ரக போதை மாத்திரைகள்,பதப்படுத்தப்படுத்தப்பட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.