வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 வெடிகுண்டு, அரைகிலோ கஞ்சா பறிமுதல்- தப்பியோடியவருக்கு வலைவீச்சு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 வெடிகுண்டுகள் மற்றும் அரைகிலோ கஞ்சா உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6 வெடிகுண்டு, அரைகிலோ கஞ்சா பறிமுதல்- தப்பியோடியவருக்கு வலைவீச்சு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி பாடசாலை தெருவில் ஒரு வாடகை வீட்டில் கணவரை இழந்த உஷா மற்றும் அஸ்வந்த், அர்விந்த் ஆகியோர் தங்கியுள்ளனர். இதற்கிடையில் ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி பாடசாலை தெருவில்   ஒருவீட்டில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் படி அங்கு சென்ற போலீசாரை, கண்டதும் அர்விந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியுள்ளனர். பின்னர் வீட்டை சோதனையிட்டபோது 6 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரைகிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனைதொடர்ந்து தப்பியோடிய அர்விந்த்தின் அண்ணன் அஸ்வந்த் மற்றும் தாய் உஷா ஆகியோரிடம் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து பறிமுதல் செய்யப்பட்ட வெடுகுண்டுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து அதனை செயலிழக்கம் செய்ய உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.