காண்பித்த பொருளுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை தான் சீமானுக்கும்...செருப்பு காட்டிய விவகாரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி ...!!

காட்டிய பொருளுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை தான் சீமானுக்கு என்று மேடையில் செருப்பு எடுத்து காட்டி பேசியது தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.

காண்பித்த பொருளுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை தான் சீமானுக்கும்...செருப்பு காட்டிய விவகாரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி  ...!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலினை சந்தித்த பிறகு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ விகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில்,

திமுக-காங்கிரஸ் உடனான கூட்டணி வலுவாக உள்ளதாவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் செருப்பு எடுத்து காட்டி பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள் விக்கு காட்டிய அந்த பொருளுக்கு என்ன மரியாதையோ அதை மரியாதை தான் அவருக்கும் என்று  ஈ. வி.கே.எஸ்.இளங்கோவன் பதில் அளித்தார்.