மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான் பள்ளிகள் திறக்கப்படுகின்றன ...அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பள்ளிகள் திறக்கப் படுகின்றன என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான் பள்ளிகள் திறக்கப்படுகின்றன ...அமைச்சர் அன்பில் மகேஷ்

மயிலாடுதுறை மாவட்டம் கோமல் ஊராட்சியில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர். தொகுதி மேம்பாட்டு நிதியில் 16லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நூலகக் கட்டிடம் திறப்பு விழா இன்று மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம்,  அமைச்சர்கள் மெய்யநாதன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப் பட்ட காரணத்தால் பள்ளி செல்லும் குழந்தைகள் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படாமல், மீண்டும் நடைமுறை வாழ்க்கைக்கு வரவேண்டும் என்பதற்காக நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்றார்.

பள்ளிக்கு வருவதும் வராததும் மாணவ மாணவிகள் விருப்பம் என்ற போதிலும் பள்ளிக்கு வராத மாணவர்கள் கல்வி கற்பதற்காக ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும் என்று கூறிய அவர், இருப்பினும் பெருமளவு அதாவது 55 சதவிகிதம் அளவு வழக்கமான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

டிசம்பர் மாதம் மாதிரி தேர்வு ஒன்றும் நடைபெறும், தேர்வு முறையில் மாற்றம் இன்றி மார்ச் ஏப்ரல் மாதங்களில் வழக்கமான தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.