பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை...கார் டிரைவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை....!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்துஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை...கார் டிரைவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை....!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் வெனீஸ்குமார். இவர் கார் ஓட்டும் டிரைவர் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீலை மாதல் 30 ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு பத்தாவது படிக்கும் மாணவி ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்று ஆளில்லா வீட்டுக்குள் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் வினிஸ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றும் வந்தது.

இந்தநிலையில் இந்த நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி தனசேகரன், ஓட்டுநர் வெனீஸ் குமாருக்கு சாகும்வரை சிறையில் இருக்கும்படி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்தார்.