புதுச்சேரியில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை  - அமைச்சர் நமச்சிவாயம்

கொரோனா காரணமாக கடந்த 2021-22 கல்வியாண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட போது மாணவர்களின் பாதுகாப்பு கருதி சுழற்சி முறையில் வகுப்புகள் என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனால் சனிக்கிழமைகளிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கின.

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றார். மேலும் மாணவர்களுக்கான பேருந்து இயக்கப்படும் என்றும் பள்ளி திறந்த அன்றைய தினமே மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்.