சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து ஓ.பி.எஸ் வீட்டில் ஆலோசனை?

சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து ஓ.பி.எஸ் வீட்டில் ஆலோசனை?

சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து தேனியில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் அதிமுகவில் சசிகலாவையும் தினகரனையும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் இடையே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஓ. பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு வந்த முன்னாள் அமைச்சர்களான புத்திச்சந்திரன், செல்லப்பாண்டியன் ஆகியோர் அவரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.