அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் சென்னை 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த‌போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்றும், கட்சியும்-சின்னமும் தங்களிடம் தான் இருப்பதாகவும், தேர்தல் ஆணையமும் இதை உறுதி செய்துள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. சசிகலா தொடர்ந்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் வாதம் முடிவடையாததால், வழக்கு விசாரணை அக்டோபர் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.