சசிகலாவின் சகோதரர் திவாகரன் மருத்துவமனையில் அனுமதி!

சசிகலாவின் சகோதரர் திவாகரன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சசிகலாவின் சகோதரர் திவாகரன் மருத்துவமனையில் அனுமதி!

சசிகலாவின் சகோதரர் திவாகரன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா முதலில் அரசியலில் இருந்து விலகுகிறேன் என அறிவித்திருந்தார். ஆனால் அண்மை காலமாக அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வரும் அவர், விரைவில் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திப்பேன் எனவும், அதிமுகவை மீட்பேன் எனவும் கூறி வருவது அதிமுக தலைமைகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இன்று அதிகாலை உடல்நலம் குன்றியதால் உடனடியாக அவர்  போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.