சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து... கடை உரிமையாளர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதியை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து...  கடை உரிமையாளர் கைது

 சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக சங்கராபுரம் போலீஸார் பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செல்வ கணபதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், சங்கராபுரம் போலீசார் செல்வகணபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.