சேலம் : ஆட்சியர் அலுவலகத்தின் முன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி...! போலீசார் விசாரணை..!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி உட்பட இருவர் தீக்குளிக்க முயற்சி..!

சேலம் : ஆட்சியர் அலுவலகத்தின் முன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி...! போலீசார் விசாரணை..!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள தேக்கல்வாடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான மணிகண்டன் மற்றும் அவரது சகோதரி ரம்யா ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு,  சொந்தமாக ஒரு ஏக்கர் 37 சென்ட் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது உறவினர்கள், நிலத்தை அபகரிக்கும் நோக்கில் மிரட்டல் விடுத்து வருவதாக கூறியுள்ளார். 

இதனால், மாற்றுத்திறனாளி மணிகண்டன் மற்றும் அவரது சகோதரி ரம்யா இருவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளனர். பின்னர் மணிகண்டன் மற்றும் அவரது சகோதரி ரம்யா ஆகிய இருவரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீட்டு, அவர்களை சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.