வெள்ளத்தில் தத்தளித்த மூதாட்டி பத்திரமாக மீட்பு...

செங்கல்பட்டு மாவட்டத்தில், வெள்ளத்தில் தத்தளித்த மூதாட்டி மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வெள்ளத்தில் தத்தளித்த மூதாட்டி பத்திரமாக மீட்பு...

பருவ மழை காரணமாக திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கேளம்பாக்கம் அருகே சிறிய பிள்ளையார் கிராமத்தில் வசித்து வந்த மூதாட்டி, உடமைகளுடன்  பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்காக வௌ்ளத்தை கடக்க முயன்றபோது, தடுமாறி கீழே விழுந்தார்.

இந்தநிலையில் வெள்ளத்தில் தத்தளித்த மூதாட்டியை அருகிலிருந்த ஒருவர் மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்தார். அதனைதொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.