உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 2 கோடியே 38 லட்சம் வருவாய்

பழனி முருகன்  கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 50 வருவாயாக கிடைத்தது.

உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 2 கோடியே  38 லட்சம் வருவாய்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் நிரம்பியதை அடுத்து  பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.  கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில்  உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மும்மரமாக நடைபெற்றது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 50 வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 1¼ கிலோ (1.373) கிராம், வெள்ளி 15¼ கிலோ (15.319) கிராம், வெளிநாட்டு கரன்சி  நோட்டுக்கள் 91 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

மேலும் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம் மற்றும் பொருட்களும், பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.