100 பேரின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட தலா ரூ.13 கோடி.. அப்புறம் என்ன ஆச்சு?

சென்னை தி.நகர் எச்.டி.எப்.சி வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேரின் கணக்குகளில் தலா 13 கோடி ரூபாய் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

100 பேரின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட தலா ரூ.13 கோடி.. அப்புறம் என்ன ஆச்சு?

தி.நகர் உஸ்மான் சாலையில் இயங்கி வரும் எச்.டி.எப்.சி வங்கி கிளையில் பணப்பரிவர்த்தனையின் போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறபடுகிறது.

இதன் காரணமாக திநகர் கிளை வாடிக்கையாளர்கள் 100 பேரின் வங்கி கணக்குகளில் தலா 13 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது. பணப்பரிமாற்றம் குறித்து அறிந்த வங்கி நிர்வாகம், குறிப்பிட்ட 100 பேரின் வங்கி கணக்குகளை உடனடியாக தற்காலிகமாக முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வங்கி தரப்பில் முறையான புகார் அளிக்கப்படாத நிலையில், வங்கி வாடிக்கையாளர் ஒருவர் மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.