மின் கசிவால் கூரை வீட்டில் தீவிபத்து - வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம்!!

மின் கசிவால் கூரை வீட்டில் தீவிபத்து - வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம்!!

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நள்ளிரவு பூட்டிய வீட்டில் இருந்து புகை வெளியே வந்தது. தொடர்ந்து அப்பகுதியினர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிவது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, டிவி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.