ஓடும் பேருந்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதல்ஜோடி..மருத்துவமனையில் அனுமதி....!!

சேலம் அருகே ஓடும் பேருந்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓடும் பேருந்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதல்ஜோடி..மருத்துவமனையில் அனுமதி....!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ், இவர் லோகேஸ்வரி என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்று, பின்னர் அங்கிருந்து வேலை தேடிக் கொண்டு பெங்களூருக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்த காதல் ஜோடி நேற்று பெங்களூரில் இருந்து சேலத்திற்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது, சேலம் அருகே கருப்பூர் பகுதியில் இருவரும் பேருந்தில் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

இதைப் பார்த்த சக பயணிகள் உடனடியாக இருவரையும் சிகிச்சைக்காக அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து காதல் ஜோடியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருப்பூர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்த நிலையில் லோகேஸ்வரி வீட்டில் அதிகளவில் தொந்தரவு கொடுத்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பின்னர் விஷம் குடித்து  தற்கொலைக்கு முயற்சித்ததும் தெரிவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.