ரூ.7500 கோடியில் மேம்படுத்தப்படும் சாலைகள்... நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு...

ரூ.7500 கோடியில் மேம்படுத்தப்படும் சாலைகள்

ரூ.7500 கோடியில் மேம்படுத்தப்படும் சாலைகள்... நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு...

தமிழகத்தில் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள் உள்ளிட்ட சாலை உட்கட்டமைப்பு பணிகள் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 255 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலைகள் 2 ஆயிரத்து 123 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்படும் என கூறியுள்ளது.

இதைப்போல நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 96 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் 412 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, சாலைகளை பலப்படுத்தும் பணி 750 கோடி ரூபாயிலும், பாலங்கள் கட்டும் பணி 117 கோடி ரூபாயிலும் நடைபெறும் என கூறியுள்ளது.

மேலும், மழை காலங்களில் தண்ணீர் தேங்காத வகையிலும், மழைநீர் வடிந்து செல்ல ஏதுவான வகையிலும் திட்டமிட்டு சாலைகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.