வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகரை கண்டித்து சாலை மறியல்...

ஈரோட்டில் வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ​

வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகரை கண்டித்து சாலை மறியல்...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈரோடு மாவட்டம், நேதாஜி காய்கறி சந்தை கடந்தாண்டு வ.உ.சி. பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, இங்கு போடப்படும் கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், வியாபாரிகளை ஒப்பந்ததாரர் மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், புகார் அளித்த வியாபாரிகள் அனைவருக்கும் திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று ஈரோடு பேருந்து நிலையம் முன்பு காய்கறிகளை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய வியாபாரிகள், ஒப்பந்ததாரர் மாநகராட்சி நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், இதுதொடர்பாக, புகார் அளித்த வியாபாரிகளை வியாபாரம் செய்யவிடாமல் திமுக பிரமுகர் தடுப்பதாகவும் கூறினர். இதுகுறித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.