அதிகரிக்கும் கொரோனா : தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் - மா.சுப்பிரமணியன்!

கொரோனா தொற்று பரவல் அதிகமாகும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா : தொற்று பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் - மா.சுப்பிரமணியன்!

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வழிகாட்டு நடைமுறைகளை மக்கள் பின் பற்ற வேண்டும் என்றார்.  

ஒருவேளை தொற்று மேலும் அதிகரிக்கும் பட்சத்தில்  கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.