"ஓய்வில்லை நமக்கு.. முதலிடமே இலக்கு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"ஓய்வில்லை நமக்கு.. முதலிடமே இலக்கு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் அரசுப்பணிகளை வழக்கம்போல் தொடர ஆயத்தமாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில், தொடர்ச்சியான பணிகள் மற்றும் தட்பவெப்ப மாற்றம் காரணமாக தனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வில் இருந்தாலும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டுதான் வருவதாக கூறியிருக்கும் முதலமைச்சர், நேற்றிரவு சென்னையில் பெய்த மழையால் வடிகால் அமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளார். முதலிடம் என்ற இலக்கை அடைவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.