காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்டு திரிந்த இளைஞர் மீட்பு!!

காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்டு திரிந்த இளைஞர் மீட்பு!!

கன்னியாகுமரியில் காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய ஒருவரை 3 ஆண்டுகளுக்குப் பின் உறவினர்கள் மீட்டனர்.

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் சிக்குப்பிடித்த தலையுடன் இளைஞர் ஒருவர் பல மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துவந்தார்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் தென்மலையில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா வந்த முருகன் என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தமது உறவினர் என்று அடையாளம் கண்டுள்ளார். மேலும் பேச்சு கொடுத்ததில் 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான உறவினர் முத்து என்பது தெரிய வந்தது. உடனே அவரை மீட்டு, முடிதிருத்தும் கடையில் மொட்டை அடித்து, புத்தாடை அணிவித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இளைஞரைப் பற்றி விசாரித்ததில், தென்காசி மாவட்டம் தென்மலையைச் சேர்ந்த முத்து, ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வந்தபோது,  அவர் காதல் தோல்வியால் வீட்டைவிட்டு வெளியேறி மனநலம் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.