ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிக்கு சிகிச்சை வழங்கக் கோரிக்கை....
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கும் முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்கக் கோரி உத்தரவுக்காக மனுத்தக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முருகனின் மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா தாக்கல் செய்துள்ள மனுவில், சிறையில் உள்ள முருகனை அவரது வழக்கறிஞர்கள் அண்மையில் சந்தித்த போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | நாக்கு வெட்டப்படும்...பகிரங்கமாக பேசிய பா.ஜ.க. பிரமுகர்...வழக்குபதிவு செய்த போலீசார்!
கடந்த 32 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பதால் உடல் எடை குறைந்து பேச முடியாது நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரி வேலூர் சிறைத்துறையிடம் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க | 32 சவரன் நகையை கொள்ளையடித்த மர்மநபர்கள்...14 சவரன் நகையை விட்டு சென்றது ஏன்?
எனவே முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க தமிழக அரசு, சிறைத்துறை டி,ஜி,பி., ஐ,ஜி., மற்றும் வேலூர் சிறைத்துறை எஸ்.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
மேலும் படிக்க | தெரியாமல் செய்து விட்டேன்..! பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு நூதன நிபந்தனை ஜாமின் !