குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவரை நீக்கம் செய்த அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்..!

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவரை நீக்கம் செய்த அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்..!

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரையும், உறுப்பினரையும் தமிழக அரசு நீக்கியது:

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி மற்றும் ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களையும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி  கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நீக்கியது. 

உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி:

இதனை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சரஸ்வதி, எந்தவித காரணங்களின்றியும், தங்களிடம் முன்கூட்டியே தெரியப்படுத்தாமலும் பணிநீக்கம் செய்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஊதியம் பெறாத கவுரவப் பதவியல் பணியமர்த்தப்பட்ட அவர்கள், உத்தரவை ரத்து செய்ய கோர முடியாது என தமிழக அரசு தெரிவித்தது. 

தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்:

தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கவுரப் பதவியாக இருந்தாலும், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பணிநீக்கம் செய்தது சட்டவிரோதம் எனக்கூறி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.