ரூ. 800 கோடி மதிப்புடைய நான்கரை ஏக்கர் நிலம் மீட்பு...!

சென்னை கத்திப்பாரா அருகில் 800 கோடி ரூபாய் மதிப்புடைய நான்கரை ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டது.  

பல்லாவரம் வட்டம் புனித தோமையார் மலை கிராமத்தில் 800 கோடி ரூபாய் மதிப்புடைய சுமார் நான்கரை ஏக்கர் நிலத்தை 40 ஆண்டுகளுக்கு மேலாக கிறித்தவ மதப் பிரச்சார கூடம், ஆக்கிரமித்து குத்தகைக்கு விட்டு பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : "திமுக ஆட்சியில் ஜாதிய வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது" - எடப்பாடி குற்றச்சாட்டு

ஆனால், இதுவரையில் எந்த விதமான குத்தகை பணமோ, வாடகையோ தராமல் வணிக நோக்கில் பயன்படுத்தி வந்ததால் அதனை அகற்றி அரசிடம் ஒப்படைக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து  ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த அனைத்து வளாகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டு கட்டிடங்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்றும் பணி நடைபெற்றது.