பள்ளி வளாகத்தில் கருகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு...வெளிவராத மர்மங்கள்...!
பள்ளிக்கு சென்ற சிறுமி தீயில் கருகி சாவு...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். கூலித்தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பிரியதர்ஷினி, பிரித்திகா என்ற மகள்களும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர்.
சத்யராஜின் மூன்று பிள்ளைகளும் பாச்சலூரில் இருக்கின்ற ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வந்துள்ளனர். வீட்டு அருகிலே பள்ளி அமைந்ததால் மூன்று பிள்ளைகளும் பெற்றோர்கள் இன்றி தனியாகவே தினமும் சென்று கொண்டிருந்தனர்.
அந்தவகையில், 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பிரித்திகா, வழக்கம் போல் நேற்று காலையில் 3 பேரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். காலை 11 மணியளவில் முதல் இன்டர்வெல் வகுப்பின் போது பிரித்திகா எப்போதும் போல வகுப்பறையைவிட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. அதன்பின்னர் பிரித்திகா வகுப்பறைக்கு வரவில்லை.
இந்நிலையில், மாணவி பிரித்திகா ரொம்ப நேரம் ஆகியும் வகுப்பறைக்கு வராததால் சந்தேகமடைந்த பள்ளி ஆசிரியர் மாணவியை தேடிய போது , பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார் .
தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சிறுமி பிரித்திகாவை யாரும் எரித்துக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த மாணவியின் தந்தை சத்யராஜ் மகளின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் பாச்சலூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும், பள்ளிக்கு சென்ற சிறுமி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பதறவைத்துள்ளது.