ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்: "கோரிக்கைகளை நிறைவேற்ற" இராமதாசு வலியுறுத்தல்!

ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்: "கோரிக்கைகளை நிறைவேற்ற" இராமதாசு வலியுறுத்தல்!

ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த  15-ஆம் நாள் முதல்  சென்னை சைதாப்பேட்டையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் இவர்களது போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.சைதாப்பேட்டையில் ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம் | Tamil News  Panchayat secretaries' sit-in protest in Saitappettai TNPSC.

இந்நிலையில், இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு  அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் ஊராட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் அவர்களின்  பணிப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவை சார்ந்தவையாகும்.  ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவற்றை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டக்கூடாது என தமிழக அரசிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

கிராமப்பகுதிகளில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்பவர்கள்  ஊராட்சி செயலாளர்கள் தான் என சுட்டிக்காட்டியுள்ள அவர் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஊராட்சி செயலாளர்களின் போராட்டத்தால்  கிராமங்களில் மேற்கண்ட பணிகள் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ள அவர் ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:டிஸ்னி ஹாட்ஸ்டாரின் "கேரளா க்ரைம் ஃபைல்ஸ்" டீசர் வெளியீடு...!!