வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உயர்வு - முதலமைச்சர் பெருமிதம்

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உயர்வு - முதலமைச்சர் பெருமிதம்

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எல்லாருக்கும் எல்லாம் என்ற உன்ன நோக்கத்துடன் திமுக அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர தனிஅக்கறையுடன் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார். 

இதையும் படிக்க : என்னை சிறையில் அடைக்கலாம்; ஒருபோதும் முடக்க முடியாது - ராகுல்காந்தி பேச்சு!

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், பணி நியமனம், கல்வி உதவித் தொகை, வீட்டுமனை பட்டா ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான வழக்குகளை விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், ஆதிதிராவிடர் மக்களின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.