”அப்ரண்டிஸ் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனுக்கு கூட வேலை வழங்கப்படவில்லை” - ரயில்வே மாணவர்கள் விரக்தி..

”அப்ரண்டிஸ் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனுக்கு கூட வேலை வழங்கப்படவில்லை” - ரயில்வே மாணவர்கள் விரக்தி..

ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காத நிலையில் தங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று ரயில்வே துறை மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் முடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், 1996-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில்  ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனுக்கு கூட வேலை வழங்கப்படவில்லை என்றும், இந்த விரக்தியில் இதுவரை 24 பேர் இறந்துள்ளனர் என்றும் புகார் தெரிவித்தனர்.

, தங்களுக்கும் வேலை கிடைக்காத நிலையில் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்றும் உருக்கத்துடன் கூறினர்.  

இதையும் படிக்க   | "மதுரை எய்ம்ஸ் டெண்டர் தேர்தலுக்கான நாடகமாக இருக்கலாம்" முதலமைச்சர் விமர்சனம்!!