ஒற்றை தலைமை குறித்து செல்லூர் ராஜூவிடம் கேள்வி... செய்தியாளர் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்த செல்லூர் ராஜூ!!

அதிமுக ஒற்றை தலைமை குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பதில் ஏதும் கூறாமல், கையெடுத்து கும்பிட்டதோடு, செய்தியாளரின் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்துள்ளார்.

ஒற்றை தலைமை குறித்து செல்லூர் ராஜூவிடம் கேள்வி... செய்தியாளர் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்த செல்லூர் ராஜூ!!

அதிமுக ஒற்றை தலைமைக்கான யுத்தம் முற்றிவரும் சூழலில், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தீர்மானக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதே சமயம் கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். , தரப்பு ஆதரவாளர்கள் சூழ்ந்திருக்க, அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்கெனவே ஆலோசனையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்தார். இதையடுத்து வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கையெடுத்து கும்பிட்ட செல்லூர் ராஜூ, செய்தியாளரின் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து நைசாக விடை பெற்றுச் சென்றார்.