புதுக்கோட்டை : ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா...!

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது

புதுக்கோட்டை : ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா...!

புதுக்கோட்டை திருகோகர்ணம் கோவில்பட்டி பகுதியில் ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் அப்பகுதியின் காவல் தெய்வமாக விளங்குகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று துவங்கிய யாகசாலையில் தமிழில் வேதங்கள் வாசிக்கப்பட்டன. கணபதி ஹோமம், கோமாதா பூஜை, கோபுர கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு வகையான ஹோமங்கள் செய்யப்பட்டு காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் புனித நீரானது கோபுர கலசங்கள், விமானத்திற்கு கொண்டுவரப்பட்டு தமிழில் மந்திரங்கள் முழங்க கும்பத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.