பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்...தமிழக அரசு

பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களிடம் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை  மேம்படுத்த வேண்டும்...தமிழக அரசு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

முன்னதாக அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அடிப்படை வசதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குளியல் அறை, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் 570 கோடியில் சுங்குவார்சத்திரம் அருகே விடுதிகள் கட்டப்படும் எனவும் சிப்காட் நிறுவனம் மூலம் 18 ஆயிரத்து 750 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் விடுதிகள் கட்டப்படும் எனவும்  தமிழக அரசு தெரிவித்துள்ளது.