50 ஆண்டுகள் அமைச்சராக இருந்தாலும்...இந்த துறை பெரிய சவால் தான் - துரைமுருகன் பேச்சு!

50 ஆண்டுகள் அமைச்சராக இருந்தாலும்...இந்த துறை பெரிய சவால் தான் - துரைமுருகன் பேச்சு!

பல்வேறு துறைகளில் 50 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தாலும், சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையை காப்பாற்றுவது பெரிய சவாலாக இருந்ததாக அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி - பதில் நேரத்தில் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மூக்கணாங்கயிறு இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வந்த இத்துறையில், நடப்பாண்டில் ஆயிரத்து 572 கோடி ரூபாய் லாபம் பெற்றுக் கொடுத்ததாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க : லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறிய டிட்கோ, சிப்காட்...அமைச்சர் பெருமிதம்!

மேலும் அடுத்த 5 ஆண்டுகளில், இத்துறையில் பெரும் லாபம் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துரைமுருகன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பல்வேறு துறைகளில் 50 ஆண்டுகளாக அமைச்சராக இருந்தாலும், சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையை காப்பாற்றுவது பெரிய சவாலாக இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.