முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு...!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு  வழக்கு:  விசாரணை ஒத்திவைப்பு...!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக சி. விஜயபாஸ்கரும், அவரது மனைவியும் இன்று நேரில் ஆஜராக கடந்த 5-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இருவரும் நேரில் ஆஜராகினர். 

இதனையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

இதையும்  படிக்க    | செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்!