தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை தீவிரம்....!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை தீவிரம்....

தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை தீவிரம்....!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் 25 கடைகள் கொண்ட தினசரி காய்கறி விற்பனை மார்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றை, அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் வாடகைக்கு எடுத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள், தினசரி கோடி கணக்கில் விற்கப்பட்டு வருகிறது. கடைக்கு தேடி வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்கு தேவையான லாட்டரி எண்கள் மற்றும் அவர்களுடைய பெயர்களை எழுதிக்கொள்ளும் விற்பனையாளர்கள் அதற்கான தொகையை பெற்றுக்கொள்கின்றனர்.

மண்ணச்சநல்லூர் லாட்டரி ஏஜெண்டுகள், இறுதி முடிவு வெளியானதும், வெற்றி பெற்றவர்களிடம். வெற்றி பணத்தில் இருந்து கமிஷன் தொகை போக மீதி பணத்தை வெளிமாநில லாட்டரி ஏஜெண்டுகளிடம் இருந்து,  வாடிக்கையாளர்களுக்கு பெற்று தருகின்றனர்.

மண்ணச்சநல்லூர் மையப்பகுதியில் நடைபெறும் இந்த சட்ட விரோதமான லாட்டரி சீட்டு விற்பனையால், நாள் ஒன்றுக்கு கோடி கணக்கில் பண பரிமாற்றம் செய்யப்படுவதால் பெரும் குற்றச்சம்பவம் அரங்கேறும் வாய்ப்புள்ளது. எனவே காவல்துறையினர் இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி, இதற்கு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.