உத்திரபிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி நிற்கவேண்டும்....சல்மான் குர்ஷித்

உத்திரபிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி நிற்கவேண்டும் என சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி நிற்கவேண்டும்....சல்மான் குர்ஷித்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்து அகற்ற சதித்திட்டம் தீட்டி அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்பிய முன்னாள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.

பஞ்சாப் தேர்தலில் கேப்டன் அம்ரிந்தர் சிங் தனி கட்சி ஆரம்பித்தால் அது பாஜகவின் வெற்றியை தான் பாதிக்கும் என கூறிய அவர், உத்திரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் பெண்கள் அதிகளவில் போட்டியிடுவார்கள் என தெரிவித்தார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாட்டிகன் போப்பை சந்தித்தது நல்லது என நினைக்கின்றேன். ஆனால் நரேந்திர மோடி அவர்கள் இப்பொழுது  நல்லவர்களை சந்திக்கிறார் அதை நான் நல்லதாக தான் பார்க்கிறேன் என கூறினார்.