ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து...சாலையோரம் கவிழ்ந்து விபத்து...ஒருவர் உயிரிழப்பு

கள்ளகுறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து...சாலையோரம் கவிழ்ந்து விபத்து...ஒருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் முன்னே சென்ற மற்றொரு பேருந்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்த மனோன்மணி எனும், 60 வயது மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சுமார் பத்துக்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.