புதிய இரயில் சேவை தொடங்கி வைக்க பிரதமர் வருகை...! பிரதமர் வருகையை முன்னிட்டு பிற இரயில் சேவை நிறுத்திவைப்பு ...!

 புதிய இரயில் சேவை தொடங்கி வைக்க பிரதமர் வருகை...! பிரதமர் வருகையை முன்னிட்டு பிற இரயில் சேவை நிறுத்திவைப்பு ...!

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் "வந்தே பாரத் " இரயில் சேவையை நாளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து இரயில் நிலையத்தில் 5 அடுக்கு காவல் போடப்பட்டுள்ளது. மேலும் இன்றும் நாளையும் இரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முதல் கட்ட பரிசோதனை பணிகளில் காவல் துறையினர் முழுமுனைப்போடு ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமூக இடைவெளி விட்டு பயணிகள் பயணிக்கவும் குறிப்புகள்  வரையப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும்  செய்யப்பட்டு வருகின்றது. சுமார் காவல்  துறையினரால் முதல் கட்ட ஒத்திகை பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.  சென்ட்ரல் இரயில் நிலையத்தில் 10-வது நடைமேடையில் "வந்தே பாரத்" இரயில் சேவை துவங்க இருப்பதால்,   முறையே 8, 9, 10 மற்றும் 11 - வது  நடைமேடைகளில் இரயில் சேவை முடக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது. நடைமேடைகளில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இரயில் நிலையத்திற்குள்ளேயே சுமார் 1000 போலீசார்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.