கருணாநிதியை போல் ஸ்டாலினையும் நாடாள அழைப்பார்கள் - ஆசையை உருக்கத்துடன் பகிர்ந்த துரைமுருகன் !

கருணாநிதியை போல் ஸ்டாலினையும் நாடாள அழைப்பார்கள் - ஆசையை உருக்கத்துடன் பகிர்ந்த துரைமுருகன் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாடாள அழைக்கப்படுவார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25 ஆம் ஆண்டு பொன்விழா மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த 16 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியின் நிறைவு நாள் சென்னை கலைவாணர் அரங்கத்தில்  நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என் நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க : வெளியானது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...முதலிடத்தை பிடித்த மாவட்டம் எது...?

நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், தொழிற்சங்க தலைவராக இருப்பதை விட 5 தொகுதிகளுக்கு எம்.எல்.ஏவாக இருக்கலாம் என நகைச்சுவையாக கூறினார். உழைப்பாளர் தினம் மே 1 ஆம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறையும் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி தான் என்று பெருமைப்பட தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இடுப்புக்குக் கீழே கட்டிக் கொண்டிருந்த துண்டை தோளுக்கு மேலே போட வைத்த பெருமை, திமுக கட்சிக்கு தான் உண்டு என தெரிவித்தார். மேலும், கருணாநிதியை குடியரசுத் தலைவராக பதவியேற்க அழைத்ததுபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நாடாள அழைப்பார்கள், அந்த நாளுக்காக தான் காத்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் பேசினார்.