10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்றுடன் நிறைவு!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது.

10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்றுடன் நிறைவு!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறை தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில் 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் 19 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.