தமிழகம் முழுவதும் இன்று 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கியது. மே 2ம் தேதி வரை நடைபெறும் செய்முறை தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. செய்முறை தேர்வையொட்டி, அதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வழங்கியுள்ளது. வழக்கமாக செய்முறை தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படும். தற்போது இது, 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.