மாணவிகளுக்கு ஆபாச மெஸேஜ்... ஆன்லைன் வகுப்பில் ஆங்கில பேராசிரியரின் லீலைகள்... போராட்டத்தில் குதித்த மாணவர்கள்....!

சென்னையில் மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பிய ஆங்கில பேராசிரியரை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்  

மாணவிகளுக்கு ஆபாச மெஸேஜ்...  ஆன்லைன் வகுப்பில் ஆங்கில பேராசிரியரின் லீலைகள்... போராட்டத்தில் குதித்த மாணவர்கள்....!

சென்னை கோயம்பேடு பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் தமிழ்ச்செல்வன் . இவர் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளின் செல்போன்களுக்கு ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இது குறித்து கல்லூரி மாணவர்களிடையே கூறியுள்ளார்.

உடனடியாக கல்லூரி மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இதுதொடர்பாக தகவல் அறிந்த மதுரவாயில் போலீசார் உடனடியாக கோயம்பேட்டில் இருக்கக்கூடிய கல்லூரி வளாகத்தில் குவிந்தனர்.

பின்னர் காவல் உதவி ஆணையர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் உடனடியாக ஆசிரியரை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர்.

அதனைதொடர்ந்து உடனடியாக கல்லூரி நிர்வாகமும் ஆசிரியரை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் இது தொடர்பாக கல்லூரியில் கமிட்டி அமைத்து சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக ஆசிரியர்கள் மீது இதுபோன்ற புகார்கள் அடுத்து அடுத்து வருவது பெற்றோர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.