புதுச்சேரியில் 3-வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டம் - 8 பேர் பணி நீக்கம்

புதுச்சேரியில் 3-வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டம் - 8 பேர் பணி நீக்கம்

புதுச்சேரியில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து, மூன்றாவது நாளாக இன்று தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக டைமிங் பிரச்சினை காரணமாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை, தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களுடன் நேற்று அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்று போராட்டம் வலுத்து வருகிறது. இதனிடையே பணிக்கு வராத ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் 8 பேரை பணி நீக்கம் செய்து போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.