” காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படுகிறது” - அண்ணாமலை கருத்து.
தமிழ்நாடு காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல்துறையாகவே மாறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக காவல்துறையின் பொய் வழக்குகள் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறையை காரணமாக, பரமக்குடி பாஜக நிர்வாகியான தமிழ்ச்செல்வன் பார்த்திபனூர் காவல் நிலையத்திலே தீக்குளித்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதே நிலை தொடர்ந்தால் பாஜகவினரின் எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க | ”உதயநிதியின் தலைக்கு 10 கோடி” சவால் விட்ட சாமியார் மீது வழக்கு பதிய கோரி மனு...!
தமிழகக் காவல்துறையின் பொய் வழக்குகள் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறையின் காரணமாக, துடிப்பான இளைஞரான பரமக்குடி ஒன்றிய @BJYMinTN துணைத் தலைவர் திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று பார்த்திபனூர் காவல் நிலையத்திலே தீக்குளித்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.…
— K.Annamalai (@annamalai_k) September 5, 2023