பராமரிப்பு பணியின் போது கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை...!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மாவூத்துகுளம் பராமரிப்பு பணியின் போது ஒரு அடி உயரமுள்ள பெருமாள் சிலை கண்டெடுப்பு.

பராமரிப்பு பணியின் போது கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை...!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாவூத்து குளத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குளத்தில் உள்ள நீரை வெளியேற்றும் பணி நடைபெற்ற போது, குளத்தில் சுமார் 1 அடி உயரமுள்ள பெருமாள் சிலை, ஒரு கை சேதம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

பின்னர் இது குறித்து வத்திராயிருப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிலையை மீட்டு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வருவாய்த்துறையின்  இது என்ன வகையான சிலை என்பது குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.