பரோலில் வந்த பேரறிவாளனுக்கு தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை....

ராஜூவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் தருமபுரியின் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரோலில் வந்த பேரறிவாளனுக்கு தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை....

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை கைதியாக உள்ள பேரறிவாளன் பரோலில் வந்து தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் இருந்து வருகிறார். தொடர்ந்து பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சிறுநீரக பாதிப்பு இருப்பதால், கொரோனா தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளததாக கூறப்பட்டது. இதனால் பேரறிவாளன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்த கோரிக்கையை பரிசீலித்த  தமிழக அரசு, கடந்த மே 28 ஆம் தேதி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பேரறிவாளனுக்குத் தமிழக அரசு.  8 முறையாக பரோலை நீட்டித்து உள்ளது.


மேலும் பரோலில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் தொடர்ந்து கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கு ஸ்கேன் எடுப்பதற்காக பலத்து போலீஸ் பாதுகாப்புடன் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் டி.எஸ்.பி சாந்தலிங்கம் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்புடன் தருமபுரியில் உள்ள தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து வரப்பட்டார். அப்பொழுது  பேரறிவாளனுடன் அவரது தாயாரும் அற்புதம்மாள் வந்திருந்தார்.


தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யபட்டது. அதனை தொடர்ந்து சிறுநீரகம் தொடர்பாக அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்தவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.  தொடர்ந்து 3 மணியளவில் பரிசோதனைகள் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.