" மக்கள் மாற்றத்தை விரும்பி காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்.." - அண்ணாமலை.

"காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போன்ற கதையை சொல்கிறார் ராகுல் காந்தி...."

" மக்கள் மாற்றத்தை விரும்பி காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்.." -  அண்ணாமலை.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமியை தரிசித்த பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன.

தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை, நாட்டு மக்கள் வளமுடனும், நலமுடனும் வாழ அருள் புரிய வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன் என்று கூறினார். பின்னர், " கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எந்த கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வந்த சரித்திரம் கிடையாது.

நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால் மக்கள் தீர்ப்பு வேறு விதமாக அமைந்துவிட்டது. இருந்தாலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றும்", என்றும் கூறினார்.  

மேலும்,  மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்ததால் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது;  ஆனால் ராகுல் காந்தி காக்கை உட்கார பணபலம் விழுந்தது என்ற முதுமொழிபோல் பேசி வருகிறார்; மக்கள் மாற்றத்தை விரும்பி காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்;  ராகுல் காந்தி தானும் தன்னுடைய சகோதரியும் பிரச்சாரம் செய்ததால் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்று கருதுகிறார்", என விமர்சித்தார். 

ஆனால் அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை குறிப்பிட்டு,  அந்த மாநில தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என கூறினார். மேலும், கர்நாடகாவில் உள்ள மொத்த எம்பிக்கள் எண்ணிக்கை 28. ஆனால் அவற்றில் 25 எம்பிக்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது", எனவும் கூறினார்.  

இதையும் படிக்க     } கர்நாடக தேர்தலுக்கு பின் திடீர் திருப்பம்..! மல்லிகார்ஜுன கார்கே மீது அவதூறு வழக்கு...!

தொடர்ந்து பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தை பொறுத்த வரை 28 பாராளுமன்ற தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம் என்று  கூறிய அவர், 2024 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் சரித்திரம் படைக்கும் என்றும் தெரிவித்தார். 

மேலும், பாதையாத்திரையில் கலந்து கொள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின் ஜூலை இரண்டாவது வாரம் குறிப்பிட்டபடி தன்னுடைய தலைமையில் பாஜக பாதையாத்திரை தமிழ்நாட்டில் நடைபெறும் என்றும்  கூறினார்.

இதையும் படிக்க     } 'மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை' செயலாளராக பொறுப்பேற்றார் -ககன் தீப் சிங் பேடி...!!