'இந்துத்துவா-கார்ப்பரேட்' என்ற கூட்டு அரசை வீழ்த்த.... மக்கள் உழைத்து வருகின்றனர்..! - ஜி.ராமகிருஷ்ணன்

12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தது வரவேற்கத்தக்கது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி. 

'இந்துத்துவா-கார்ப்பரேட்' என்ற கூட்டு அரசை வீழ்த்த....  மக்கள் உழைத்து வருகின்றனர்..! - ஜி.ராமகிருஷ்ணன்

மே தினத்தை முன்னிட்டு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடியேற்றி சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதையடுத்து ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "இன்று 138-வது மே தின விழாவும், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்கள் சென்னை கடற்கரையில் 100-வது விழாவை கொண்டாடிய நாள். கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் 8 மணி நேர வேலைக்காக ரத்தம் சிந்தி போராடி பெற்ற நாள் இன்று. தொழிலாளர்கள் உரிமைக்காகவும், மனித இனத்துக்கான நாள் மே மாதம் கொண்டாடக்கூடிய நிலையில் அடுத்த ஆண்டு இதே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது என்று கூறினார். 

மேலும் அவர், கடந்த 9 ஆண்டுகாலமாக மத்திய அரசு உழைப்பாளி மக்களின் உரிமைகளைப்  பறித்து வருகிறது‌ என்றும், அதோடு,  44 தொழிலாளர் சட்டங்களில் 15 சட்டங்களை அறவே ஒழித்து விட்டது என்றும், மேலும் 29 தொழிலாளர் நலச் சட்டங்களை அரசு திருத்தி உள்ளது என்றும் கூறினார்.

இதையும் படிக்க    ]  12 மணி நேர வேலை சட்டமசோதா...! திரும்ப பெற்றதாக முதலமைச்சர் அறிவிப்பு...!!

அதனையடுத்து, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு: இந்துத்துவா-கார்ப்பரேட் என்ற கூட்டு அரசை அடுத்த ஆண்டு வீழ்த்த உழைக்கும் மக்கள் உழைத்து வருகின்றனர். 12 மணி வேலையை திமுக அரசு திரும்ப பெறுவதாக முதல்வர் இன்று அறிவித்தது குறித்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன்,  சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போதே இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக எதிர்த்தது. அதோடு, தொழிற்சங்கங்கள் எதிர்த்தது. இவ்வாறிருக்க, 12 மணி வேலையை திமுக அரசு முழுமையாக திரும்ப பெறுவதாக முதல்வர் இன்று அறிவித்தது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிக்க    ]  தொழிலாளர்கள் உரிமையை முதலமைச்சர் பேணி காப்பார்...! தொமுச பொது செயலாளர்...!!