ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தது... பரிசல் இயக்க அனுமதி!

தருமபுரி மாவட்டம் ஒகேனகல்லில் 6ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்த நிலையில் பரிசல் இயக்க  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகா தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த வந்த மழையால் ஒகேனக்கலில் தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலனை கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுக்கு 6000 ஆயிரம் கன அடியாக வருவதால் சுற்றுலா பயணிகள் பரிசல்களில் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிகளை கண்டு களித்தனர்.